sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை சிறு வியாபாரிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் புகார்

/

சிவகங்கை சிறு வியாபாரிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் புகார்

சிவகங்கை சிறு வியாபாரிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் புகார்

சிவகங்கை சிறு வியாபாரிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் புகார்


ADDED : ஜன 15, 2024 12:19 AM

Google News

ADDED : ஜன 15, 2024 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை நகரில் பொங்கல் விற்பனை படு ஜோராக நடந்தாலும் நகராட்சியில் ரோட்டோரத்தில் விற்பதற்கு கடை வாடகை எனக்கூறி ரூ.150 வரை வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.

பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று சிவகங்கை காந்தி வீதியில் கிராமப்புற விவசாயிகள் மஞ்சள், தேங்காய், கூரைப்பூ உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டனர்.

ரோட்டில் தரையில் கடைவிரித்து வியாபாரம் செய்த கிராம விவசாயிகளிடம், நகராட்சி கடை வாடகை ஒப்பந்ததாரர்கள் விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தது தான் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது குறித்து மேலசாலுார் விவசாயி முருகன் கூறியதாவது, நான் மொத்தமே ரூ.1000 மதிப்பிலான மஞ்சள், பூசணி, கூரைப்பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்தேன்.

இந்த பொருட்களை விற்பனை செய்ய நகராட்சி ஒப்பந்ததாரர்கள் ரூ.150 வரை வசூலித்தது தான் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நகராட்சி அதிகாரிகள், இது போன்று முறைகேட்டில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us