sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கரும்பு விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் 

/

கரும்பு விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் 

கரும்பு விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் 

கரும்பு விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் 


ADDED : டிச 01, 2024 11:49 PM

Google News

ADDED : டிச 01, 2024 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி; காரைக்குடியில் சக்தி சர்க்கரை ஆலை சார்பில் கரும்பு விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு சக்தி சர்க்கரை ஆலை தலைவர் எஸ்.வேலுச்சாமி தலைமை வகித்தார். முதுநிலை பொது மேலாளர் உத்தண்டி முன்னிலை வகித்தார். கரும்பு ஆலை அதிகாரிகள், காரைக்குடி, சாக்கோட்டை, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கரும்பு விவசாயிகள் பங்கேற்றனர்.

காவிரி - குண்டாறு திட்டம் நன்று


முதுநிலை பொது மேலாளர் உத்தண்டி பேசியதாவது: தமிழகத்தில் காவிரி - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் நிறைவேறினால், கரும்பு விவசாயிகளின் நீர்வள பிரச்னையை தீர்த்து வைக்கும் முக்கிய நீர்வள திட்டமாக அமையும்.

இதன் மூலம் கரும்பு விவசாயம் அதிகரித்து, கரும்பு உற்பத்தி அதிகரித்து ஆலைக்கு அதிக கரும்புகள் வருவதின் மூலம் சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி பெருகி, ஏற்றுமதி அதிகரிக்கும் என்றார். சிறந்த கரும்பு விவசாயிகளுக்கு, சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us