sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வேளாண் அதிகாரிகள் ஆய்வு

/

வேளாண் அதிகாரிகள் ஆய்வு

வேளாண் அதிகாரிகள் ஆய்வு

வேளாண் அதிகாரிகள் ஆய்வு


ADDED : டிச 04, 2024 09:39 AM

Google News

ADDED : டிச 04, 2024 09:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி : இளையான்குடி சுற்று வட்டார கிராம பகுதிகளில் நெற்பயிர்களை இலை சுருட்டு புழு தாக்குவதாக தினமலர் இதழில் செய்தி வெளியானதையடுத்து வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அதனை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.

இளையான்குடி,சாலைக்கிராமம், முனைவென்றி,சூராணம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் குண்டு மிளகாய்க்கு அடுத்தபடியாக நெல் விவசாயம் நடக்கிறது. கல்வெளிப்பொட்டல்,தெற்கு கீரனுார், அரியாண்டிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் நேரடி விதைப்பு மூலம் நெல் விவசாயம் செய்துள்ளனர்.

தற்போது நெற்பயிரில் இலை சுருட்டு புழு தாக்கி வருவதால் விவசாயிகள் பரிதவிப்புக்குள்ளாகி வருவதாகவும், இதனால் மகசூல் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை இருப்பதாக நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை கல்வெளிபொட்டல் கிராம வயல்களுக்கு சென்ற வேளாண்மை இணை இயக்குனர் சுந்தர மகாலிங்கம், உதவி இயக்குனர் தங்கபாண்டியன், துணை வேளாண்மை அலுவலர் நடேசகுமார், உதவி வேளாண்மை அலுவலர் சோபனா ஆகியோர் ஆய்வு செய்து இலை சுருட்டு புழுக்களை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.






      Dinamalar
      Follow us