sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அ.தி.மு.க., பொதுசெயலாளர் நாளை சிவகங்கையில் பயணம்

/

அ.தி.மு.க., பொதுசெயலாளர் நாளை சிவகங்கையில் பயணம்

அ.தி.மு.க., பொதுசெயலாளர் நாளை சிவகங்கையில் பயணம்

அ.தி.மு.க., பொதுசெயலாளர் நாளை சிவகங்கையில் பயணம்


ADDED : ஜூலை 28, 2025 06:49 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணம் மூலம் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி நாளை சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார் என சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, நாளை மாலை 4:30 மணிக்கு காரைக்குடி ஐந்து விளக்கு சமீபம் எம்.ஜி.ஆர்., சிலை அருகே மக்களை சந்தித்து பேசுகிறார்.

பிரசார வாகனம் மூலம் திருப்புத்துார் வரும் அவர், மாலை 5:030 மணிக்கு அண்ணாதுரை சிலை அருகேயும், இரவு 7:45 மணிக்கு சிவகங்கை அரண்மனைவாசல் முன் மக்களை சந்தித்து பேசுகிறார்.

சிவகங்கையில் அன்று இரவு தங்குகிறார். ஜூலை 30 அன்று காலை 10:00 மணிக்கு சிவகங்கை சன்ராக்ஸ் மகாலில் வெளிநாடுவாழ் இந்தியர்கள், மஞ்சுவிரட்டு, பந்தயம், வடமாடு நல சங்கங்கள், விவசாய சங்கம், விளையாட்டு வீரர்கள், தென்னை நார் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

அன்று மாலை 4:30 மணிக்கு மானாமதுரை முத்துராமலிங்க தேவர் சிலை அருகே மக்களை சந்தித்து பேசுகிறார்.

அ.தி.மு.க., அனைத்து அணி, பிரிவு நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us