ADDED : ஆக 22, 2025 02:57 AM
சிவகங்கை: இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் வீரர்கள் தேர்வு செப்., 2 மற்றும் 5ல் நடைபெறும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இந்திய விமான படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்கள் நேரடி ஆட்சேர்ப்புக்கான தேர்வு சென்னை, தாம்பரத்தில் உள்ள விமான படைதளத்தில் செப்., 2 ஆண்களுக்கும், செப்., 5 ல் பெண்களுக்கும் நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க பிளஸ் 2, அதற்கு ஈடான கல்வியில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில பாடப்பிரிவிலும் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி அவசியம். இத்தேர்வில் பங்கேற்க 2026 ஜன., 1 அன்று 17.5 வயது முடிந்தும், 21 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மேலும் விபரத்திற்கு ''www.agnipathvayu.cdac.in'' என்ற இணையதள முகவரியிலோ அல்லது சிவகங்கை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மூலம் விபரங்களை பெறலாம், என்றார்.

