ADDED : டிச 31, 2024 04:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர்: திருப்புத்துார் ஆறுமுகம்பிள்ளை சீதைஅம்மாள் கல்லுாரியில் இயற்பியல் துறை பழைய மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
1999---2002ம் ஆண்டுகளில் இயற்பியல் பட்ட வகுப்பு மாணவர்கள் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் தாங்கள் கல்வி பயின்ற கல்லுாரி வகுப்பறையில் சந்தித்தனர். மாணவர் டி.கமல்குமார் ஒருங்கிணைத்தார்.
கல்லூரி ஆட்சிமன்ற குழு துணைத்தலைவர் நா.ரமேஷ்வரன் தலைமை வகித்து பழைய மாணவர்களிடம் உரையாடினார். துணை முதல்வர், இயற்பியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
கல்லுாரியின் திறன் வளர்ச்சிக்காக இரு தையல் இயந்திரங்களை வழங்கினர்.