ADDED : மார் 20, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி பழைய செஞ்சையை சேர்ந்தவர் வெள்ளைக்கண்ணு 80, கோயில் ஒன்றில் வாட்ச்மேன் ஆக வேலை செய்து வந்தார்.
இவர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக பைக்கில் பைபாஸ் ரோட்டை கடக்க முயறன்றுள்ளார். அவ்வழியாக வந்த வேன் மோதியதில் வெள்ளைக்கண்ணு சம்பவ இடத்திலேயே பலியானார்.
சோமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

