நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை 48 காலனி நகராட்சி நடுநிலை பள்ளி ஆண்டு விழா நடந்தது.
நகராட்சி தலைவர் துரை ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன், வட்டார கல்வி அலுவலர்கள் ஜான்சார்லஸ், ஆரோக்கியசாமி, ஆலிஸ்மேரி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை மரிய செல்வி வரவேற்றார்.
ஆசிரியை சாந்தபிரபா ஆண்டறிக்கை வாசித்தார். விளையாட்டு, மன்றம், கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர் ஜெகன் நன்றி கூறினார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் அமல்ரோஜா, ஆசிரியர் பயிற்று நர் முகமதுகாசிம் பங் கேற்றனர்.

