ADDED : மார் 14, 2024 03:43 AM

அ நிறம் | அளவு
மானாமதுரை: மானாமதுரை அருகே வேம்பத்துாரில் உள்ள கைலாசநாதர் ஆவுடைய நாயகி அம்மன் கோயில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம், தயிர், இளநீர் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனை நடந்தது.
பின்னர் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து பூஜை செய்து சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. விழாவில்வேம்பத்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர்.அன்னதானம் நடந்தது.
ஏற்பாடுகளை கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும்வேம்பத்துார் கிராம மக்கள் செய்திருந்தனர்.
