ADDED : ஜன 06, 2026 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சென்னை ஐ.ஐ.டி.,யில் தேர்வாகிய சிவகங்கை அல்ஹூதா இஸ்லாமிக் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் 9 பேர் களுக்கு பாராட்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் முகமது காசிம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பைந்தமிழ் செல்வி வரவேற்றார். சென்னை ஐ.ஐ.டி., நடத்திய தகுதியாளர் தேர்வில் இவர்கள் பங்கேற்று, பி.எஸ்., தரவு அறிவியல் பட்டபடிப்பிற்கு தேர்வானதற்கான சான்றினை ஜமால் முகமது கல்லுாரி முன்னாள் துணை முதல்வர் முகம்மது சகாப்தீன் வழங்கினார்.
பேராசிரியர் கமால் நசீர், கம்பம் ஸ்டிரைட் வே பள்ளி தாளாளர் மவுலானா பங்கேற்றனர்.

