sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் ஆயுதங்களுடன் கொள்ளையர்கள்; போலீசார் விரட்டியதில் இருவருக்கு கால் முறிவு

/

சிவகங்கையில் ஆயுதங்களுடன் கொள்ளையர்கள்; போலீசார் விரட்டியதில் இருவருக்கு கால் முறிவு

சிவகங்கையில் ஆயுதங்களுடன் கொள்ளையர்கள்; போலீசார் விரட்டியதில் இருவருக்கு கால் முறிவு

சிவகங்கையில் ஆயுதங்களுடன் கொள்ளையர்கள்; போலீசார் விரட்டியதில் இருவருக்கு கால் முறிவு


ADDED : நவ 25, 2024 11:46 PM

Google News

ADDED : நவ 25, 2024 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் அருகே ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியவர்களை போலீசார் விரட்டி பிடித்ததில் இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் பின்பகுதியில் உள்ள காட்டு பகுதியில் ஒரு கும்பல் ஆயுதங்களுடன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் அன்னராஜா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல் போலீசாரை தாக்க முயற்சித்து தப்பியது. போலீசார் ரயில்வே டிராக்கில் விரட்டி சிவகங்கை தொண்டி ரோட்டை சேர்ந்த மதியழகன் மகன் அருண்பாண்டி 22, சாக்ளா தெரு ராமச்சந்திரன் மகன் நித்திஸ்வரன் 21, சோழபுரம் காளீஸ்வரன் மகன் அய்யப்பன் 20, புதுப்பட்டி 16,17 வயது இரண்டு சிறுவர்கள் என 5 பேரை கைது செய்தனர். இதில் அருண்பாண்டி, நிதிைஷ போலீசார் விரட்டியதில் கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. இருவரும் மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போலீசார் கூறுகையில், இந்த கும்பலின் தலைவர் மதன் காளையார்கோவில் அருகே கொல்லங்குடி அண்ணன் தம்பி கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அந்த வழக்கு நடத்த பணம் தேவைப்பட்டதால் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் உள்ள வீடுகளில் திருட திட்டம் தீட்டி சிக்கினர் என்றனர்.






      Dinamalar
      Follow us