ADDED : பிப் 03, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவில் அருளானந்தர் தேர் பவனி திருவிழா நடந்தது. திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் மாலை நவநாள் திருப்பலியும், சிறப்பு வழிபாடும் நடந்தது.
விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் அருளானந்தரின் திருவிழா கூட்டுத்திருப்பலி கூத்தலுார் பாதிரியார் திரவியம் தலைமையில் நடந்தது. காளையார்கோவில் பாதிரியார் சேசு, உதவி பாதிரியார் பாஸ்டின் பாரதி முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து தேர்பவனியானது காளையார்கோவில் நகரை சுற்றி வலம் வந்தது.

