ADDED : பிப் 25, 2026 08:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: எப்.சி., கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சி.ஐ.டி.யூ.,வினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் கருப்பு தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் குமாரவேல், ஆட்டோ சம்மேளன மாவட்ட துணை தலைவர் கண்ணன், சி.ஐ.டி.யூ மாவட்ட பொது செயலாளர் சேதுராமன், மாவட்ட தலைவர் உமாநாத், மாவட்ட துணை செயலாளர்கள் வேங்கையா, முருகானந்தம், மாவட்ட பொருளாளர் அய்யம்பாண்டி முன்னிலை வகித்தனர்.
மினி பேருந்தை அரசே நடத்த வேண்டும். மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும்.
ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்ய வேண்டும். எப்.சி., கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

