sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மடப்புரம் கோயிலுக்கு மினி பஸ்கள் ேஷர் ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு

/

மடப்புரம் கோயிலுக்கு மினி பஸ்கள் ேஷர் ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு

மடப்புரம் கோயிலுக்கு மினி பஸ்கள் ேஷர் ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு

மடப்புரம் கோயிலுக்கு மினி பஸ்கள் ேஷர் ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு


ADDED : ஆக 10, 2025 02:37 AM

Google News

ADDED : ஆக 10, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: மடப்புரம் கோயிலுக்கு இயக்கப்பட்ட சிறப்பு மினி பஸ்களை ஷேர் ஆட்டோ டிரைவர்கள் சிலர் மறித்தனர். போலீசார் அவர்களை எச்சரித்தனர்.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியன்று 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள். மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், கமுதி, பார்த்திபனுார் உள்ளிட்ட தொலை துாரங்களில் இருந்து வரும் பக்தர்கள் திருப்புவனத்தில் இறங்கி ஷேர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

மதுரை, சிவகங்கை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டாலும் பக்தர்கள் கோயிலுக்கு சென்று வர ஷேர் ஆட்டோக்களையே அதிகம் நம்பி உள்ளனர். ஷேர் ஆட்டோக்கள் மடப்புரம் அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

திருப்புவனம் நகர ஆட்டோக்கள் தவிர மற்ற பகுதிகளில் இருந்தும் பலரும் திருப்புவனம் -- மடப்புரம் இடையே ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர். பஸ் ஸ்டாப்களில் தொடர்ச்சியாக ஆட்டோக்களை சிலர் நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக புகார் உள்ளது.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வெள்ளிக்கிழமை மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு இயக்கப்பட்ட மினி பஸ்களை திருப்புவனம் - மடப்புரம் இடையே கடந்த இரு வாரங்களாக இயக்கி வருகின்றனர். ஷேர் ஆட்டோக்களை விட குறைந்த கட்டணம், கோயில் வாசல் வரை மினி பஸ்கள் செல்வதால் பக்தர்கள் பலரும் ஷேர் ஆட்டோக்களை தவிர்த்து மினி பஸ்களில் பயணம் செய்ய தொடங்கினர்.

ஆத்திரமடைந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர் நேற்று முன்தினம் கோயிலுக்கு இயக்கப்பட்ட மினி பஸ்சை மறித்து போராட்டம் நடத்தினர். திருப்புவனம் போலீசார் அரசு பஸ்சை மறிப்பது தவறு, மக்களுக்கு சேவை செய்ய குறைந்த கட்டணத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மீறி பஸ்களுக்கு இடையூறு செய்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்தனர்.






      Dinamalar
      Follow us