ADDED : ஜன 10, 2025 04:59 AM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஆய்வாளர் விஜயகுமார் வரவேற்றார். சார்பு நீதிபதி கலைநிலா தலைமையில், டி.எஸ்.பி. கவுதம், மாஜிஸ்திரேட் மாரிமுத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டல மேலாளர் கண்ணன், என்.என்.எல். டிவிஎஸ் நிர்வாக இயக்குனர் நாச்சியப்பன், மாவட்ட சாலை பாதுகாப்பு படை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் மணிமாறன் பங்கேற்றனர்.
