ADDED : பிப் 07, 2025 05:24 AM
அ நிறம் | அளவு
பூவந்தி : பூவந்தி பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லுாரியில் பெண்களுக்கு தற்காப்பு கலை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
செயலர் சிவராம் முன்னிலை வகித்தார். முதல்வர் விசுமதி வரவேற்றார். சிவகங்கை மாவட்ட ஜூடோ அமைப்பின் தாளாளர் பிரசன்னா முகாமில் பெண்களுக்கு தற்காப்பு கலை குறித்தும் அவற்றின் அவசியம் குறித்தும் விளக்கமளித்தார். வழக்கறிஞர் சுமித்ரா, மாணவியர் தலைவி சந்திரருசிகா பங்கேற்றனர்.
