ADDED : பிப் 14, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை, : மானாமதுரை ரயில்வே போலீசார் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ராஜகம்பீரம், முத்தனேந்தல்,வாகுடி, வெள்ளிக்குறிச்சி, திருப்பாச்சேத்தி,வேலாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆளில்லா ரயில்வே கேட்களை மக்கள் பாதுகாப்பாக கடந்து செல்வது,ரயில்வே ஸ்டேஷன் வளாக பகுதிகளில் காணாமல் போகும் குழந்தைகளை 1098 நம்பர் மூலம் பாதுகாப்பாக சமூக நலத்துறையிடம் ஒப்படைப்பது, மேலும் ரயில்கள் மீது கற்களை வீசும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுப்பது உட்பட பல்வேறு விழிப்புணர்வை பொதுமக்களிடம் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., தனுஷ்கோடி தலைமையில் போலீசார் ஏற்படுத்தினர்.

