ADDED : மார் 02, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., மற்றும் வாக்காளர் எழுத்தறிவு கழகத்தின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தாசில்தார் தங்கமணி முன்னிலை வகித்தார். தமிழ் துறைத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். வாக்காளர் விழிப்புணர்வு குறித்த ரங்கோலி ஓவியப் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. வாக்காளர் எழுத்தறிவு கழக ஒருங்கிணைப்பாளர் அசோக் குமார், துணை தாசில்தார் ராஜசேகரன் என்.எஸ்.எஸ்., அலுவலர்கள் சித்ரா, சுந்தரி தெய்வமணி கலந்து கொண்டனர்.

