ADDED : மார் 17, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாணவர்களுக்கு போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி ராதிகா தலைமை வகித்தார். டாக்டர்கள் ராஜேஷ், அரவிந்தன், டவுன் எஸ்.ஐ., செல்வ பிரபு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.