ADDED : ஏப் 04, 2026 04:46 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை:மானாமதுரையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழுதுகள் மையத்தில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைகை மொழியில் வாக்காளர்கள் உறுதிமொழி எடுத்தல், முதல்முறையாக வாக்களிக்கும் மாற்றுத்திறனாளிகளை கவுரவப்படுத்துதல், மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சி, கையெழுத்து வாகனம் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மூன்று சக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது.
மாற்று திறனாளிகள் அதிகாரி பாலகிருஷ்ணன்,மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார்,பி.டி.ஓ.,க்கள் பெமினா தேவி, முத்துக்குமரன் மற்றும் சி.எஸ்.ஐ., காது கேளாதோர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
