ADDED : மார் 19, 2026 04:42 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கையில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
சிவகங்கை ராமசந்திரா பூங்காவில் கலெக்டர் பொற்கொடி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலம் பூங்காவில் இருந்து காந்தி வீதி, மரக்கடை ஸ்டாப், தெப்பக்குளம், அரண்மனைவாசல் வழியாக பஸ் ஸ்டாண்ட் வரை சென்றது. நிகழ்ச்சியில் சிவகங்கை கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா, மாவட்ட வழங்கல் அலுவலர் பழனிக்குமார், சிவகங்கை தாசில்தார் சிவராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
