/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வங்கி கணக்கில் ரூ.2.23 லட்சம் திருட்டு
/
வங்கி கணக்கில் ரூ.2.23 லட்சம் திருட்டு
ADDED : ஜன 28, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : சிவகங்கை மீனாட்சி நகரை சேர்ந்தவர் ஜெபகுமார் 60. இவரது அலைபேசிக்கு ஜன.26ம் தேதி காலை 11:12 மணிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. ஜெபகுமார் குறுஞ்செய்தியில் வந்த லிங்கில் யுசர் ஐடி, பாஸ்வேர்டை பதிவு செய்துள்ளார், பிறகு ஒருவர் வங்கி மேலாளர் என பேசியுள்ளார்.
சிறிது நேரத்தில் ஜெபகுமார் வங்கி கணக்கில் இருந்து 7 தவணைகளில் ரூ. 2 லட்சத்து 23 ஆயிரத்து 900 எடுக்கப்பட்டுள்ளது.
ஜெபகுமார் இழந்த பணத்தை மீட்டு தருமாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் மோசடி செய்த நபர்களை தேடி வருகின்றனர்.