ADDED : மார் 04, 2024 05:21 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை; காளையார்கோவில் தெற்கு ஒன்றியம் சார்பாக பிரதமரின் பத்தாண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் மயில்சாமி தலைமை வகித்தார். பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் அங்குசாமி வரவேற்றார். மாவட்ட பொது செயலாளர்கள் மார்த்தாண்டன், நாகராஜ் சாதனைகளை விளக்கி பேசினர்.
மாவட்ட செயலாளர்கள் கந்தசாமி, சாந்தி, மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் கருப்பையா, ஒன்றிய தலைவர்கள் லோகு, முத்துமுனியாண்டி, நாட்டரசன், செல்லமுத்து, ஒன்றிய பொது செயலாளர் காளைராஜன், ஒன்றிய துணை தலைவர் ராஜா, பாண்டி, வெண்மணி பங்கேற்றனர்.
