ADDED : ஜன 12, 2026 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ் சங்கம் சார்பில் நுால்வெளியீட்டு விழா நடந்தது. சங்க தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். நிறுவன தலைவர் ஜவகர்கிருஷ்ணன், முன்னாள் தலைவர் அன்புத்துரை முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் பாண்டியராஜன் வரவேற்றார்.
சங்க உறுப்பினர் சுப்பையா எழுதிய ஆதி அந்தாதி நுாலை சுந்தரராஜன் வெளியிட, பகீரத நாச்சியப்பன் பெற்றார். சங்க புதிய தலைவராக ஓவியர் முத்துக்கிருஷ்ணன், பொருளாளர் ஜெயச்சந்திரன், நிர்வாக குழு முத்துப்பாண்டியன், ரமேஷ் கண்ணன், பாண்டி, பாலசந்தர், மரியசெல்வி, மாலா, பேராசிரியர் குழந்தை சுப்பிரமணியன், பூங்குழலி, வெங்கடசுப்பிரமணியன், வழக்கறிஞர் கிருஷ்ணன், சாம்பவிகா மேல்நிலை பள்ளி செயலர் சேகர் வாழ்த்துரை வழங்கினர்.
பாஸ்கர் சிவாச்சாரியார் ஆசியுரை வழங்கினார். நுால் ஆசிரியர் சுப்பையா ஏற்புரை அளித்தார்.

