ADDED : ஜன 15, 2026 05:30 AM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்: நெற்குப்பை சோமலெ நினைவு கிளை நுாலகத்தில் சிறுவர் பாடல் நுால் வெளியீடு விழா நடந்தது.
நுாலகர் சே.பாஸ்கரன் வரவேற்றார். எழுத்தாளர் ஸ்ரீலட்சுமி எழுதிய 'பூந்தோட்டம்' என்ற சிறுவர் பாடல் நுால் வெளியிட்டு, சோமலெ சோமசுந்தரம் எழுத்தாளரை பாராட்டினார். புரவலர்கள் செந்தில் ராமநாதன், கண்ணன் பங்கேற்றனர். நூலக உதவியாளர்கள் சீதாலட்சுமி வையாபுரி, ஜீவிதா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
