நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவில் அருகே கொல்லங்குடியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 23 ஜோடி மாடுகள் பங்கேற்றனர். இரு பிரிவுகளாக நடந்த மாட்டு வண்டி போட்டியில் பெரியமாடு பிரிவில் 8 ஜோடிகளும், சிறியமாடு பிரிவில் 15 ஜோடி மாடுகள் பங்கேற்றனர். பெரிய மாட்டிற்கு 8 கி.மீ., சிறிய மாட்டுக்கு 6 கி.மீ., துாரமும் பந்தய எல்லையாக நிர்ணயம் செய்யப்பட்டது. விறுவிறுப்பாக நடந்த போட்டியில் மாடுகள் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு சீறிப்பாய்ந்து சென்றன. முதல் 4 இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளருக்கும் அதை ஓட்டிய சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

