ADDED : பிப் 09, 2025 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: பூவந்தி மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., முகாம், நுகர்வோர் மன்றம், நுாலக வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது.
பிளாஸ்டிக் பொருள் உபயோகம், தீமைகள் குறித்து கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை உதவி பேராசிரியர் ரமாபொற்கலை பேசினார். மாணவிகள் கோயிலில் துப்புரவு பணி மேற்கொண்டு, விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு மாணவி சீதாலட்சுமி வரவேற்றார். முதல்வர் விசுமதி வாழ்த்துரை வழங்கினார். மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி பேராசிரியர் ஜெயக்குமார் பேசினார்.
மாணவி அறிச்செல்வம் நன்றி கூறினார். கல்லுாரியில் கணிதவியல் மூன்றாம் ஆண்டு மாணவி காமாட்சி, புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து பேசினார்.

