
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் வளாக நேர்காணல் நடந்தது.
கல்லூரி தலைவர் எம்.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். முதல்வர் கே.சசிக்குமார் முன்னிலை வகித்தார். அசோக்லேலண்டு, ஓசூர் நிறுவனத்தினரால் மெக்கானிகல், மின்னியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு, மெக்காட்ரானிக்ஸ் துறை மூன்றாமாண்டு மாணவர்களுக்கு வேலைக்கான நேர்காணல் நடத்தினர்.
நிறுவன மனிதவள மேம்பாடு அலுவலர் சங்கர் நேர்காணலை நடத்தினார். தேர்வான மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் வைத்தியநாதன் நன்றி கூறினார்.