ADDED : ஆக 10, 2025 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி டி.டி., நகர் 2 வது வீதியை சேர்ந்தவர் வள்ளியம்மை 75. இவர் நேற்று இரவு வீட்டின் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டு நடந்து சென்றார்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க தாலிச்செயினை பறித்துச் சென்றனர்.
இதில் மூதாட்டி நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காரைக்குடி வடக்கு போலீஸ் ஸ்டேஷன் போலீசார் விசாரிக்கின்றனர்.

