ADDED : ஆக 26, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; காளையார்கோவில் மேலசேத்துாரை சேர்ந்தவர் இருளப்பன் மனைவி சங்கரம்மாள் 69. இவர் ஜூலை 13ல் காளையார்கோவில் அருகே உள்ள கீரனுார் கோயிலுக்கு சென்றார்.
நெரிசலில் அவர் அணிந்திருந்த 3 தங்க செயினை யாரோ திருடியுள்ளனர். அவரது அருகில் நின்ற காசி மனைவி கருப்பாயி அம்மாள் அணிந்திருந்த இரண்டரை பவுன் செயினையும் நெரிசலில் யாரோ திருடியுள்ளனர். சங்கரம்மாள் காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.