
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: அமராவதிப் புதுார் சாரதா நிகேதன் மகளிர் கல்லுாரியில் சாரதா தேவி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
சாரதேஸ்வரி பிரியா அம்பா, ராமகிருஷ்ண பிரியா அம்பா வழிபாடு செய்தனர். தொடர்ந்து காலையில் சாரதா தேவியாரின் ரத ஊர்வலம் கல்லுாரியில் இருந்து புறப்பட்டு அமராவதிப்புதுார் சிவன் கோயிலை சென்றடைந்தது. அங்கு சிறப்பு பூஜை நடந்தது. முதல்வர் சிவசங்கரி ரம்யா, இயக்குனர் மீனலோச்சனி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.