/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது! ஆக. 26ல் தேரோட்டம், 27 ல் தீர்த்தவாரி
/
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது! ஆக. 26ல் தேரோட்டம், 27 ல் தீர்த்தவாரி
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது! ஆக. 26ல் தேரோட்டம், 27 ல் தீர்த்தவாரி
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது! ஆக. 26ல் தேரோட்டம், 27 ல் தீர்த்தவாரி
ADDED : ஆக 19, 2025 01:17 AM

திருப்புத்துார்; சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக ஆக., 26 தேரோட்டம், ஆக., 27 தீர்த்த வாரி உற்ஸவம் நடக்கிறது.
நகரத்தார் கோயிலான இங்கு சதுர்த்திப் பெருவிழா பத்து நாட்கள் நடக்கும். நேற்று காலை 9:00 மணியளவில் கொடிப்படமும், அங்குசத்தேவரும் கோயிலை வலம் வந்தனர்.
தொடர்ந்து உற்ஸவ விநாயகர், சண்டிகேஸ்வரர், அங்குசத்தேவர், கொடிப்படம் மூலவர் சன்னதி முன்பாக கொடிமரம் அருகில் எழுந்தருளினர். தலைமைக்குருக்கள் பிச்சைக்குருக்கள், சோமசுந்தர குருக்கள், ஸ்ரீதர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யார்களால் அங்குசத்தேவருக்கு பூஜை நடந்து அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
பின் கொடிப்படத்திற்கும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நடப்பு காரியக்காரர்கள் காரைக்குடி சித.பழனியப்பச் செட்டியார், நச்சாந்துபட்டி மு.குமரப்பச்செட்டியார் முன்னிலையில் காலை 9:58 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பின் கொடி மரம் மலர்கள், தர்ப்பைப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜை நடந்து அலங்கார தீபாராதனை நடந்தது.
மாலை சுவாமிக்கும், ஆச்சார்யாருக்கும் காப்பு கட்டி உற்ஸவம் துவங்கியது. தொடர்ந்து இரவில் தங்க மூஷிக வாகனத்தில் கற்பகவிநாயகர் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். இன்று காலை முதல் எட்டாம் திருநாள் வரை காலை 9:30 மணிக்கு வெள்ளிக்கேடகத்தில் உற்ஸவ கற்பக விநாயகர் புறப்பாடு நடக்கும். மேலும் தினசரி இரவு வாகனங்களில் விநாயகர் திருவீதி உலாவும் நடக்கும்.
ஆறாம் திருநாளான ஆக., 23 கஜமுக சூரசம்ஹாரமும், ஓன்பதாம் திருநாளான ஆக., 26 மாலை தேரோட்டமும் நடக்கும். ஆண்டுக்கு ஓரு முறையாக அன்று மாலை 4:30 முதல் இரவு 10:00 மணி வரை மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ஆக., 27 ல் விநாயகர் சதுர்த்தியன்று காலை கோயில் திருக்குளத்தில் சதுர்த்தித் தீர்த்தவாரியும், மதியம் மூலவருக்கு முக்குருணி மோதகம் படையலும், இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடக்கும்.