நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்தவர் பெரியண்ணன் 47. இவர், மினி வேனில் கோழிகளை வைத்து விற்பனை செய்து வந்தார். காரைக்குடி அருகே உள்ள கோவிலுாரில் நேற்று முன்தினம் இரவு, கோழிகளை வலையில் அடைத்து விட்டு, மினி வேனில் துாங்கியுள்ளார்.
அப்போது, கோழிகள் கத்தும் சத்தம் கேட்டு பார்த்த போது, கோழிகளை மூடைகளில் ஒருவர் திருடியதை கண்டு சத்தம் போட்டுள்ளார்.
அங்கிருந்தவர்கள் கோழி திருடியவரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் கோழிகளை திருடியது, கோவிலுார் சிவானந்தம் மகன் கர்ணன் 28 என தெரிய வந்தது. அவரை குன்றக்குடி போலீசார் கைது செய்தனர்.

