sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குழந்தை தொழிலாளர் மீட்பு

/

குழந்தை தொழிலாளர் மீட்பு

குழந்தை தொழிலாளர் மீட்பு

குழந்தை தொழிலாளர் மீட்பு


ADDED : ஜன 26, 2025 06:50 AM

Google News

ADDED : ஜன 26, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : தேவகோட்டையில் உணவு நிறுவனத்தில் சப்ளையர் பணியிலிருந்த 13 வயதுடைய குழந்தை தொழிலாளர் ஒருவரை மாவட்ட குழந்தைகள் நலக்குழு மீட்டது.

தேவகோட்டையில் குழந்தைத் தொழிலாளர் தொடர்பாக சைல்டுலைன் 1098ல் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட குழந்தைத் தொழிலாளர் முறை தடுப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் உணவு நிறுவனத்தில் சப்ளையர் பணியிலிருந்த 13 வயது குழந்தை தொழிலாளர் ஒருவர் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டார். பணி அமர்த்திய உணவு நிறுவன உரிமையாளர் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதேபோல் தேவகோட்டை நகர் பகுதியில் வாகன பழுதுபார்க்கும் நிறுவனத்தில் 14 வயதிற்குமேல் 18 வயதிற்குட்பட்ட ஒரு வளரிளம் பருவத் தொழிலாளர் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டார்.

மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் பணிபுரிவது கண்டறியப்பட்டால் Pencil Portal https://pencil.gov.in என்ற இணையதள முகவரியிலோ 04575 -240521 அல்லது Child Help line 1098 (இலவச தொலைபேசி எண்) என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், அரசினிப்பட்டி ரோடு, காஞ்சிரங்கால், சிவகங்கை என்ற முகவரியிலோ தெரிவிக்கலாம்.






      Dinamalar
      Follow us