நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ் சங்கம் சார்பில் 'செம்மொழி நாள் விழா' கொண்டாடப்பட்டது. தமிழ் சங்க தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். நல்லாசிரியர்கள் பகீரத நாச்சியப்பன், கண்ணப்பன் முன்னிலை வகித்தனர்.
தமிழ் சங்க செயலாளர் பாண்டியராஜன் வரவேற்றார். முன்னாள் தலைவர் அன்புத்துரை, முன்னாள் செயலாளர்கள் முத்துப்பாண்டியன், ராமசந்திரன், ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், துணை தலைவர் முத்துக்கிருஷ்ணன், நிர்வாக குழு ரமேஷ் கண்ணன் பங்கேற்றனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு மரியாதை செய்தனர்.