ADDED : ஏப் 23, 2025 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை 48 காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.55 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறை கட்டட திறப்பு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் மரியசெல்வி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் துரைஆனந்த் திறந்து வைத்தார். கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், ராஜேஸ்வரி ராமதாஸ் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

