sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி 900 பேரிடம் ரூ.9 கோடி மோசடி விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு

/

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி 900 பேரிடம் ரூ.9 கோடி மோசடி விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி 900 பேரிடம் ரூ.9 கோடி மோசடி விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி 900 பேரிடம் ரூ.9 கோடி மோசடி விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு


ADDED : ஜூன் 24, 2025 06:23 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: தென் ஆப்பிரிக்கா டென்மார்க்கில் வேலை வாங்கி தருவதாக கூறி 900 பேரிடம் ரூ.9 கோடி வரை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டோர் சிவகங்கை கலெக்டர், எஸ்.பி.,யிடம் புகார் அளித்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் டி.புதுப்பட்டி கந்தகுரு விஷ்வா. காரைக்குடியில் அலுவலகம் வைத்து வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டார். இவரிடம் ராஜ்கபூர் மேலாளராக இருந்தார். 2024ல் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி விளம்பரம் செய்தனர். இதை நம்பி மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 900க்கும் மேற்பட்டவர்கள் தலா ரூ.1.30 லட்சம் வரை கொடுத்தனர். பணத்தை கொடுத்தவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு முறையும் 20 பேரை இலங்கை அழைத்து சென்று 2 மாதங்கள் வரை தங்க வைத்து, வெளிநாட்டிற்கு அழைத்து செல்லாமல் கம்பெனி கப்பல் வராததால், அனுப்ப முடியவில்லை என திருப்பி அனுப்பியுள்ளனர். இதுபோன்று 900க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி, ரூ.9 கோடி வரை வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். பணத்தை திரும்ப கேட்டபோது காரைக்குடியில் உள்ள அலுவலகத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகினர். பாதிக்கப்பட்டவர்கள் நேற்று கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர். அவர் எஸ்.பி., விசாரிக்க பரிந்துரை செய்தார்.






      Dinamalar
      Follow us