ADDED : நவ 06, 2025 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி கவி ஸ்ரீ. இவர் மாநில தடகளப் போட்டி யான ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ளார்.
அதேபோல இப்பள்ளி பிளஸ் 2 மாணவர் ஆகாஷ், குண்டு வீசுதல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். அடுத்த மாதம் புனேயில் நடைபெறும் தேசிய தடகள போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
மாணவர்களை தலைமை ஆசிரியர் பிரிட்டோ, உதவி தலைமை ஆசிரியர் ஜான் குழந்தை, உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துக் குமார் அருள் மலர் மற்றும் பயிற்சியாளர்கள் ஆசிரி யர்கள் மாணவர்கள் பாராட்டினர்.

