நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கையில் மத்திய அரசை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சஞ்சய் தலைமை வகித்தார். காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி முன்னிலை வகித்தார்.
மாநில பொதுச்செயலாளர் சுந்தரராஜன், நகர் தலைவர் விஜயகுமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரெத்தினம், எம்.எல்.ஏ., தொகுதி பொறுப்பாளர்கள் சோணை, இளம்பரிதி கண்ணன், தலைமை பேச்சாளர் அப்பாச்சி சபாபதி, வட்டார தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

