ADDED : ஏப் 17, 2025 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அரண்மனை வாசலில் காங்., சார்பில் நேஷனல் ெஹரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பா.ஜ., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சஞ்சய் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் ராஜரெத்தினம், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சோணை, பேச்சாளர் சபாபதி, சண்முகராஜா முன்னிலை வகித்தனர். எம்.பி., கார்த்தி பா.ஜ., அரசை கண்டித்து பேசினார். வட்டார தலைவர்கள் மதியழகன், உடையார், நகர் தலைவர் விஜயகுமார், கவுன்சிலர் மகேஸ்குமார் கலந்து கொண்டனர்.