sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டில்லி தேர்தலில் காங்., வெற்றி சிக்கல் என்கிறார் சிதம்பரம்

/

டில்லி தேர்தலில் காங்., வெற்றி சிக்கல் என்கிறார் சிதம்பரம்

டில்லி தேர்தலில் காங்., வெற்றி சிக்கல் என்கிறார் சிதம்பரம்

டில்லி தேர்தலில் காங்., வெற்றி சிக்கல் என்கிறார் சிதம்பரம்


ADDED : ஜன 19, 2025 02:27 AM

Google News

ADDED : ஜன 19, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி:''டில்லி சட்டசபை தேர்தலில் காங்., வெற்றி பெறுவது சிக்கல் தான். ஆனால் சில இடங்களிலாவது வெற்றி பெறும்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.

காரைக்குடியில் அவர் கூறியதாவது:

இன்று மத்திய அரசின் சட்டத்தை போல் ஈ.வே.ரா., காலத்தில் சட்டம் இருந்திருந்தால் காவல்துறையால் அவர் வாழ்நாள் முழுவதும் சிறை வைக்கப்பட்டு இருப்பார். ஈ.வே.ரா., வை விமர்சிக்கும் சீமானுக்கு மக்களின் ஆதரவு அவர் பிறந்த ஈரோட்டில் நடைபெறும் தேர்தலில் தெரிந்துவிடும்.

டாலர் விலை உயர்வால் ஏற்றுமதியாளர்களுக்கு லாபமும் நுகர்வோருக்கு பாதிப்பும் பணவீக்கமும் ஏற்படும். டாஸ்மாக் வருமானம் அதிகரித்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதனை கொண்டாட முடியாது.

தமிழகத்தில் லாட்டரி விற்பனை தேவையில்லாதது. மக்களிடம் வாங்கும் சக்தியை அதிகரிக்க மத்திய அரசு வரும் பட்ஜெட்டில் சலுகைகளை தர வேண்டும்.

டில்லி சட்டசபை தேர்தலில் காங்., வெற்றி பெறுவது சிக்கல் தான். ஆனால் சில இடங்களையாவது கைப்பற்ற வேண்டும். இலங்கை அதிபர் சீனாவிற்கு பயணம் மேற்கொள்வதை சந்தேக கண்ணோடு பார்க்க வேண்டாம்.

அவர் முதலில் இந்தியாவிற்கு தான் வந்தார். 'இண்டியா' கூட்டணியில் த.வெ.க., இணையவேண்டும் என்ற தமிழக காங்., தலைவரின் கருத்து தவறில்லை என்றார்.






      Dinamalar
      Follow us