ADDED : நவ 22, 2024 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டையில் கடந்த நான்கு நாட்களாக விடாமல் ஐப்பசி அடை மழை போல் பெய்து வருகிறது.
அவ்வப்போது சிறிது இடைவெளி விட்டு விட்டு மழை தொடர்கிறது. மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடைமழை பெய்தாலும் பள்ளிக்கு விடுமுறை விடப்பட வில்லை. மாணவர்கள் மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு சென்று திரும்பு கின்றனர். மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ள நிலையில் கல்வித் துறை அதிகாரிகள் முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.