ADDED : அக் 01, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவிலில் புனித மைக்கேல் பாலிடெக்னிக் கல்லுாரியும், சிவகங்கை மாவட்ட நேருயுவுகேந்திராவும் இணைந்து சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடத்தினர்.
கல்லுாரி முதல்வர் மகேந்திரன் தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா உறுப்பினர்கள் சிவமணி வரவேற்றார். அபிராமி உறுதிமொழி வாசித்தார். மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பாலிடெக்னிக் துறை தலைவர்கள் கருணாகரன், வேல்முருகன், பெர்க்மான்ஸ், விரிவுரையாளர் முகேஸ்வரன் கலந்துகொண்டனர். விரிவுரையாளர் ராமர் முகாமை ஏற்பாடு செய்தார்.