/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிரிக்கெட் போட்டி மாணவர்கள் தேர்வு
/
கிரிக்கெட் போட்டி மாணவர்கள் தேர்வு
ADDED : ஜன 05, 2024 04:30 AM
காரைக்குடி ; அழகப்பா பல்கலை., கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி அழகப்பா அரசு கலைக் கல்லுாரியில் நடந்தது. இதில் அழகப்பா பல்கலை இணைவு பெற்ற கல்லுாரிகள் கலந்து கொண்டன.
அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதலிடத்தை பெற்றது. இதன் மூலம், அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பாலக்குமார் உதயகுமார் மகேந்திரன், ஹரிஹர பாண்டி திருமுருகன் ஆகியோர் சென்னை இந்துஸ்தான் நிகர்நிலை பல்கலையில் நடக்கும் தென் மண்டல பல்கலைக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
அழகப்பா கலைக் கல்லூரி மாணவிகள் அபிநயா ரூத்எஸ்தர் வினோதா லக்ஷ்சனா, ஆகியோர் தென் மண்டல பல்கலை அணிகளுக்கு இடையேயான போட்டியில் விளையாட உள்ளனர்.
தகுதி பெற்றுள்ள மாணவ மாணவிகளை கல்லுாரி முதல்வர் பெத்தாலட்சுமி உடற்கல்வி இயக்குனர் அசோக் குமார் மற்றும் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் பாராட்டினர்.