ADDED : மார் 20, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை திருப்பதி நகரை சேர்ந்தவர் சந்திரன் 48. இவருக்கும் இவரது தம்பி மச்சக்காளையின் மகன் மாதவன் என்ற வெங்கடேஷ் என்பவருக்கும் இட பிரச்னை இருந்துள்ளது. ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் மற்றும் உருளியை சேர்ந்த சிவக்குமார் 20, அருண் 22, என். வலசை கிராமத்தை சேர்ந்த தனுஷ் வேல் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து சந்திரனை அரிவாளால் வெட்டினர்.
சந்திரன் மதுரை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிவகங்கை போலீசார் சிவக்குமார், அருண், தனுஷ் வேல் 3 பேரையும் கைது செய்தனர்.

