நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை வேலாயுத சுவாமி கோயில் தெருவை சேர்ந்தவர் சோமன் மகன் மதன்குமார் 22. இவர் தனியார் டிராவல்சில் டிரைவராக பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு நேரு பஜாரில் உள்ள தனியார் பாருக்கு டூவீலரில் சென்றார். பார் அருகே டூவீலரை நிறுத்திவிட்டு சென்றபோது 4 பேர் மதன்குமாரை அசிங்கமாக பேசி அரிவாளால் தலையின் இடதுபுறம், இடது கையில் வெட்டிவிட்டு தப்பினர். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். போலீசார் விசாரித்து வருகின்ற னர்.