ADDED : மார் 17, 2024 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகம் செல்லும் ரோட்டில் கால்வாய் உடைந்ததால் வாகனங்கள் விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றன.
இப்பேரூராட்யில் ஒன்றிய அலுவலகம் செல்லும் ரோட்டில் 20 ஆண்டுக்கு முன் கழிவு நீர் கால்வாய் கட்டினர். இந்த ரோட்டின் வளைவுகளில் கால்வாய் உடைந்து போனது.
இதனால் கழிவு நீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்தும் நடக்கின்றன. டூவீலர்கள் கால்வாய்க்குள் விழுந்து விடுகின்றன. இந்த ரோட்டை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

