sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கச்சாத்தநல்லுாரில் வைகை ஆற்றில் இறந்து மிதந்த மீன்கள்

/

கச்சாத்தநல்லுாரில் வைகை ஆற்றில் இறந்து மிதந்த மீன்கள்

கச்சாத்தநல்லுாரில் வைகை ஆற்றில் இறந்து மிதந்த மீன்கள்

கச்சாத்தநல்லுாரில் வைகை ஆற்றில் இறந்து மிதந்த மீன்கள்


ADDED : அக் 06, 2025 04:47 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி: இளையான்குடி அருகே கச்சாத்தநல்லூர் வைகை ஆற்றுப்பகுதியில் கடும் வெப்பம் காரணமாக மீன்கள் செத்து மிதந்தன.

இளையான்குடி அருகே உள்ள கச்சாத்தநல்லூரில் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமத்தை ஒட்டியே வைகை ஆறு செல்கிறது. விவசாயம், குடிநீர் தேவையை இந்த ஆறு பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைகை ஆற்றில் தண்ணீர் வந்த போது இப்பகுதியில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

இதில் ஏராளமான மீன்கள் இருந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் கடுமையான வெயில் அடித்து வருவதன் காரணமாக வைகை ஆற்றுக்குள் தேங்கி நின்ற தண்ணீர் குறைந்து வருவதினால் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.

கிராம மக்கள் கூறியதாவது, கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் கடுமையான வெயில் அடித்து வருவதினால் குடிநீருக்கு கூட சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் கூட மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. கடந்த ஆடிப்பட்டத்தின் போது ஏராளமான விவசாயிகள் விவசாயத்தை துவக்கினாலும் தொடர்ந்து மழை இல்லாத காரணத்தினால் பயிர்களுக்கு போதுமான தண்ணீர் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம். ஆகவே தற்போது வைகை அணையில் போதுமான தண்ணீர் இருப்பதினால் வைகை ஆற்றில் உடனடியாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கும் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us