ADDED : ஏப் 13, 2025 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : இளையான்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வக்ப் திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி மாவட்ட செயலாளர் உமர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைவர் பஷீர் அகமதுமுன்னிலை வகித்தார். துணை பொதுச்செயலாளர் சைபுல்லாஹ் மசோதாவை திரும்ப பெறக் கோரி பேசினார்.
நிர்வாகிகள் சிராஜ், உஸ்மான், அபூபக்கர், பிர்தவுஸ், சாகுல், பைசல், தீன் கலந்து கொண்டனர். சலீம் நன்றி கூறினார்.

