நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பின் சார்பில் மாநில அளவில் பணி மூப்பு பட்டியலை திருத்தம் செய்து வெளியிட கோரி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மாரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாண்டி, தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்க மாநில பொறுப்பாளர் ராஜா முகமது கோரிக்கையை விளக்கி பேசினர்.
மாவட்ட இணை செயலாளர் வீரபாண்டியன், சிவகங்கை கோட்ட தலைவர் பிச்சை, தேவகோட்டை கோட்ட தலைவர் சிவன் பங்கேற்றனர்

